வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரியில் கரைக்கப்பட்டது
ராகுல் காந்தி தாத்தா, பாட்டியிடம் படிக்க வேண்டிய பாடத்தினை படிக்கவில்லை என்றும்ரூபவ் எந்த விஷயத்திலும், எதையும் திணிக்க மத்தியரசு தயாராக இல்லை, ஆனால் எல்லா விஷயத்திலும் பின்னனி நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது. இதற்காக நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் 6 பிரிவுகளாக வாஜ்பாய் அஸ்தியை ஊர்வலமாக எடுத்து சென்றனர் . விருதுநகரில் இருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியில் அஸ்தி கரைக்க ஊர் வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று விருதுநகர் , ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்குநேற்று இரவு வந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மலர் தூவிமரியாதை செய்தனர் . இதனை தொடர்ந்து அஸ்தி இன்று காலை கோவில்பட்டியில் இருந்து கிளம்பியது.
கருத்துகள் இல்லை