Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி ஜேசுதாஸ் துவக்கி வைத்தார்.



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலை கவசம் (ஹெல் மெட்) அணிய வலியுறுத்தி வாகன பிரச்சார பேரணி திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வட்டார ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது .திருப்பத்தூர்  காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜேசுதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து   தலை கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விரிவாக பேசினார். 


    இப்பேரணி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கி புது பேருந்து நிலையம் ,மீனாட்சி திரையரங்கம், புதுப்பேட்டை ரோடு வழியாக திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சென்றது. இதில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தபடி  கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad