கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த ஒருவார காலமாக பகலில் பலத்த வெயில் அடித்தாலும், அவ்வபோது மாலையில் லேசான மழைச்சாரலும் பெய்து வந்தது.இந்நிலையில் இன்று மாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த காற்று வீசியது.
இதனை தொடர்ந்து பலத்த இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் நேரம் செல்ல மழை பெய்ததது. சுமார் 1மணி நேரம் வரை தொடர்ச்சியாக பலத்த மழை பெய்த காரணத்தினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அதிகம் வெப்பத்தின் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை