Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பனை விதைக்கும் விழா

     கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமவாளவன் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தையின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் பனை விதைக்கும் விழா நடைபெற்றது.முதற்கட்டமாக 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன.


    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமவாளவன் பிறந்த நாளை அக்கட்சியினர் பனை விதைக்கும் விழாவாக இந்தாண்டு கொண்டாடடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி தாமஸ்நகர் கண்மாய் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் விழாவிற்கு விடுதலை சிறுத்தையின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிகழ்வுக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட செயலாளர் பிரபாவளவன் தலைமை வகித்தார். இதில் கண்மாய் பகுதியில் முதற்கட்டமாக 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன. பனையின் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளவும், அதன் பலனை அனைத்து மக்களும் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்வினை ஏற்படுத்தியுள்ளதாகவும், கோவில்பட்டி பகுதியில் 5000க்கும் மேல் பனை விதைகளை விதைத்து, அதனை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விழா ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad