Header Ads

  • சற்று முன்

    மீண்டும் நாங்கள் தான் அதிமுக என்று நிருபிக்க தயார் - தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் பேச்சு



    மீண்டும் நாங்கள் தான் அதிமுக என்று நிருபிக்க திருப்பரங்குன்றம் தேர்தல் ஒரு வாய்ப்பு – தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் பேச்சு


    பாரளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம், மீண்டும் நாங்கள் தான் அதிமுக என்பதனை நிருபிக்க திருப்பரங்குன்றம் தொகுதியின் தேர்தல் இருப்பதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்;.ஏ.சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நுpகழ்ச்சிக்கு மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா தலைமை வகித்தார். இதில் தகுதி நீக்கம் செய்யட்ட ஓட்டப்பிடாரம் சட்;டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளருமான சுந்தர்ராஜ் பேசுகையில் ஆர்.கே நகர் தேர்தலில் கருத்துகணிப்புக்களை பொய்யாக்கி டி.டிவி.தினகரன் வெற்றி பெற்று நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று நிரூபித்து விட்டோம், மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிரூபிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி பாரளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம், தொண்டர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad