Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் உயிர் நீத்த  காவலர்களின் 38வது  நினைவு தினம்



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி கிராமத்தில் கடந்த 38 ஆண்டுக்கு முன் 6.08.1980ம் ஆண்டில் சுற்றித்திரிந்த  நக்சலைட்  தீவிரவாதி  சிவலிங்கம் உள்பட 4பேரை அப்போதையை ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிசாமி  மற்றும்  காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.அவர்களை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை  செய்து பின்பு சிவலிங்கத்திடம் மேலும் விசாரணை செய்யவேண்டிய நிலையில் காவலர்கள் ஜீப்பில் அழைத்து சென்றனர்


    அப்போது சிவலிங்கம் ஜீப்பில் இருந்து குதித்து காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக  வீசினார். இதில் ஜீப்பில் இருந்த ஜோலார்பேட்டை காவல்ஆய்வாளர் பழனிசாமி, காவலர்கள் முருகேசன்,இயேசுதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் அவர்களுக்கு   நினைவு தூண் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம்  6ஆம் தேதி  நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க  நாள்  நிகழ்ச்சி தொடர்ந்து ஆண்டு தோறும்  நடைபெற்று வருகிறது. இன்று 38ஆம்  ஆண்டு நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு முன்னால்  டிஜிபியும் அப்போதையை வேலூர் மாவட்ட எஸ்பியுமான தேவாரம், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி,  வேலூர் சரக டிஐஜி  வணிதா, எஸ்.பி பர்வேஸ் குமார்  ஆகியோர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினர். அப்போது 30 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர் டிஎஸ்பி ஜேசுதாஸ் உட்பட்ட காவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது பேசிய வால்டர் தேவாரம்.

    38 ஆண்டு முன்‌ நக்சலைட் பிடிக்கும் முயற்சியில் உயிர் நீத்த காவலர்களின் நினைவு மற்றும் அவர்கள் தியாகத்தை  போற்றும்  வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6 தேதி காவல் துறை சார்பில்  நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 
    இரண்டு முறை நக்சலைட் தாக்குதலில் உயிர் தப்பிய முன்னால் எம்எல்ஏவும் ஆண்டு  தோறும் வருகிறார்.  நான் இருக்கும் வரை இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துகொள்வேன். உலகத்திலேயே காவலர்களின் அறப்பணிப்பு  தியாகத்தை  பேற்றும்  வகையில்  திருப்பத்தூரில் மட்டுமே இப்படி ஒரு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுவது ஒரு  ஒரு தனி சிறப்பு. தற்போது தமிழ் நாட்டில் நக்சலைட்டுகளின் தாக்கம் இல்லை இதற்கு காரணம் அன்று தியாகம் செய்த காவலர்களின் அறப்பணிப்பு ஆகும் என கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad