Header Ads

  • சற்று முன்

    பஞ்சாயத்து பண்ண போன அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு


    ஓசூர் அருகே பஞ்சாயத்து பேச சென்ற அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி*
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொடியாளம் கிராமத்தில் இளம்பெண் விவகாரத்தில் பஞ்சாயத்து பேச சென்ற அண்ணன் தம்பியை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஓசூர் மற்றும் பெங்களுர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி குதிரைப்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன்கள் ரத்னகுமார்(32) மற்றும் காளிதாஸ்(28) இவர்கள் இருவரும்  கொடியாளம் கிராமத்தில் உள்ள தனது மாமா குள்ளப்பா குடும்பத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச சென்றுள்ளனர். குள்ளப்பாவின் மகன் ராஜ்குமாருக்கும் ஆனெக்கெல் பகுதியை சேர்ந்த  இளம் பெண்ணிற்கும் சம்பந்தம் உள்ளது என  எழுந்த பிரச்சனையில் கொடியாளம் கிராமத்தில் பஞ்சாயத்து நடந்துள்ளது.

    பஞ்சாயத்து முடிவடைந்த பின்னர் ரத்னகுமார் மற்றும் காளிதாஸ் இருவரும் இருசக்கரவாகனத்தில் ஊர் திரும்பினர். மதகொண்டப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர்களுக்கு கை, கால்கள், உடல் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ரத்னகுமார் மேல் சிகிச்சைக்காக பெங்களுர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பஞ்சாயத்து பேசிய பிரச்சனையில் சமரசம் ஆகாத இளம் பெண் பவ்யாவின் உறவினர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    இந்த சம்பவம் குறித்து தளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாயத்து பேச சென்ற இடத்தில் அண்ணன் தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி - சி. முருகன் 

    வீடியோ பதிவை nms you tube பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad