பழனி மலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு செய்முறை பயிற்சி நடைபெற்றது.
பழனி மலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு செய்முறை பயிற்சி கோவில் ஊழியர்களுக்கும் பக்தர்களுக்கும் தீயணைப்புத்துறையினர் செய்து காண்பித்தனர்
பழனி மலையில் இன்று காலை தீயணைப்புத்துறை நிலை அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர் தீ விபத்து ஏற்பட்டால் தீயை கட்டுப்படுத்துவது பற்றியும் தீ விபத்தின்போது கோயில் மண்டபங்களில் இருக்கும் பக்தர்களை தீயில் இருந்து பக்தர்களை துரித கையில் கைப்பற்றி தூக்கிச் செல்வது பற்றியும் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர் பழனி திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் பயிற்சி பெற்றனர் மேலும் கோயில் உயரமான பகுதிகளில் தீப்பற்றினால் தண்ணீரைக் கொண்டு அணைக்கும் முயற்சி பற்றியும் அளித்தனர் ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டுச் சென்றனர்
கருத்துகள் இல்லை