Header Ads

  • சற்று முன்

    ஓசூர் வனபகுதியில் இருந்து வெளி வந்த காட்டு யானைகள் அட்டகாசம் பொது மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


    ஓசூர் அருகே உள்ள பேரண்டபள்ளி வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஓசூர் பகுதியில் தற்போது ஏழு காட்டு யானைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு காட்டு யானைகள் ஆவலப்பள்ளி, சித்தனப்பள்ளி, காரிப்பள்ளி அட்டூர். நந்நிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நடமாடுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்திய வனத்துறையினர் கிராமம் கிராமமாக சென்று ஒலிபெருக்கி மூலம் யானைகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad