Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு மின்வசதி செய்து தர வேண்டும், இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட 7,10,11,12 ஆகிய வார்டுகளில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் சுகாதார சீர் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இனாமணியாச்சி மேம்பாலத்தின் நடுப்பகுதியின் நின்று போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகனசோதனையில் ஈடுபடுவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது, எனவே வாகனசோதனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இனாம்மணியாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். இனாம்மணியாச்சி கிளை செயலாளர் அழகுமுத்து, அத்தைகொண்டான் கிளை செயலாளர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கதினை தொடங்கி வைத்தார். வரும் 11ந்தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கதில் திரளான மக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ராமசுப்பு, பெருமாள்சாமி, வெங்கடாசலம், அழகுமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    watch nms today channel

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad