Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரத்தில் SDPI கட்சியின் சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின்  சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் மேல வாசல் பகுதியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கட்சியின் எட்டயபுரம் நகர தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய எஸ்டிபிஐ தலைவர் நாகூர் மீரான், எட்டயபுரம் நகர துணை தலைவர் அப்துல் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி  மாவட்ட எஸ்டிபிஐ. செயற்குழு உறுப்பினர் காதர்மைதீன் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கான பித்ரா அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    விழாவில் தமிம் அன்சாரி, முபராக், முகமது சரிபு உள்ளிட்ட ஏராளமான    எஸ்டிபிஐ.கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad