Header Ads

  • சற்று முன்

    உயிருடன் விளையாடிய டாக்டர் சதீஷ் ! போலி மருத்துவரால் மக்கள் பீதி !

    சென்னை தண்டையார் பேட்டை அஜிஸ் நகர்  பகுதியில் வசித்து வரும் திவ்யா   (14) வயது இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கையில் அடிபட்டுவிட்டதால் அதே பகுதியில் உள்ள கெட்வெல் கிளினிக் சென்று சிகிச்சை பார்த்தனர். அப்போது T.T ஊசி போட்டனர். வீட்டிற்கு வந்த சில நாட்களில் ஊசி போட்ட இடத்தில் கட்டி போல் உருவாகியது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது டாக்டர் சதிஷ் இது ஏதோ தப்பு நடந்துள்ளது இதை நாங்கள் சரி செய்துவிடுகிறோம். நாளை வாருங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் என்றனர். இதனை நம்பிய பெற்றோர்கள் மறு நாள் மருத்துமனைக்கு சென்று அறுவை சகிச்சை செய்தனர்.   ஆனால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கிறது . அதிர்ந்த பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அறுவை சிகிச்சை செய்த ஸ்டான்லி மருத்துவமனையில் பணியில் இருப்பதாக கூறிய டாக்டர் துரைராஜ் என்பவர் இல்லை. சதிஷ் என்பவர் மட்டும் இருந்தார். அவர் ஏதோ தவறு நடந்து இருக்கிறது. உங்களுக்கு பணம் தருகிறேன் என்றும்  வேறு எங்கு புகார் அளித்தாலும் எனக்கு கவலை இல்லை. காவல் நிலையம் முதல் கோட்டை வரை எங்கு சென்றாலும் கவலையில்லை என மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.  டாக்டர் சதிஷ். உடனே திவ்யாவின் பெற்றோர்கள்  மருத்துவ கவுன்சிலின் சென்று  விசாரித்த போது டாக்டர் துரைராஜ் என்பவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இல்லை என்கிற விபரம் தெரிய வந்தது. நீங்கள் உடனே காவல் நிலையதிற்கு சென்று புகார் கொடுங்கள் என்று அறிவுரை கூறினார். உடனே பெற்றோர்கள் H - 6  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். .பணம் செலவானது தான் மிச்சம் வலி குறையவில்லை என்றனர்,


    களத்தில் இறங்கிய எமது செய்தியாளர் காவல் நிலையத்தில் விசாரித்த போது காவல் ஆய்வாளர் விசாரணை செய்து வருகிறோம் என்று கூறினார்..
    மேலும் மருத்துவமனையில் விசாரித்தபோது கெட்வெல் கிளினிக் பார்மசியில் டாக்டர் என்று கூறி வலம் வந்த சதிஷ் ஒரு பார்மசி படித்தவர் என்றும் இங்கு வரும் புற நோயாளிகளும் மருத்துவ சீட்டில் முறையான பதிவெண்கள் இல்லாதது மேலும் அதிர்ச்சியை உண்டாகியது. 
    களத்தில் சந்தித்து  எமது செய்தியாளரிடம் பேசும் போது எவனும் என்னை ஒன்னும் செய்து விட முடியாது. எனக்கு பல அமைச்சர்கள் தெரியும்  என்று கூறுகின்றார். மேலும் இது போன்ற  திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மேலும் அப் பகுதி மக்களை விசாரித்த போது இது போன்ற சம்பவங்ககள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad