Header Ads

  • சற்று முன்

    ஆட்டோவில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை துரிதமாக மீட்டு கொடுத்த காவலர்



    தேனி மாவட்டம் மேல்மங்கலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பெரியகுளத்திலிருந்து மேல்மங்கலத்திற்கு ஆட்டோவில் பயணம் செய்தார். பின்பு மேல்மங்கலத்தில் இறங்கி தனது பையை பார்த்த போது தான் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10,000/- யை தவற விட்டது தெரியவந்தது. நகை மற்றும் பணத்தை தவறவிட்டு அழுது கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தென்கரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் காவலர் திரு.சந்திரசேகர் என்பவர் விவரங்களை கேட்டறிந்து சம்மந்தப்பட்ட ஆட்டோவை விரைந்து கண்டுபிடித்து நகையையும், பணத்தையும் மீட்டுக் கொடுத்துள்ளார். துரிதமாக மீட்டுக் கொடுத்த காவலர் சந்திரசேகருக்கு அப்பெண்மணி தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad