ஓசூர் வட்டசியாளர் அலுவலகம் முன்பு அரசு சங்க ஊழியர்கள் போராட்டம்
ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசால் ஆதசேசய்யா தலைமையில் அமைக்கப்பட்ட பணியாளர் சீர்திருத்த குழுவை உடனடியாக கலைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுத்துறைகளில் ஆடகுறைப்பு செய்யவும், தனியாருக்கு கண்டிராக்ட் விடவும் திட்டமிட்டுள்ளது. இது வரும் காலத்தில் நம் மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களிடன் நிரந்தர பணி வாய்ப்பை மறுக்கின்ற நாசமான திட்டமாகும். இதனால் பொதுமக்கள் நலன் கருதியும குழுவை ரத்து செய்ய கோரிய ஆர்பாட்டத்தில் 60 பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வட்ட துணை தலைவர் சிவா தலைமையில் சி.பி. ஜெயராமன் சிறப்பு ரை நிகழ்த்தினார். துறை சங்க தலைவர்கள் ஜெயலட்சுமி, காசிம்,கண்ணாமணி, கஸ்தூரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வட்ட இணை செயலர் சுரேக்ஷ் நன்றி கூறினார்.
;
கருத்துகள் இல்லை