Header Ads

  • சற்று முன்

    ஓசூரில் நகர திமுக பொது உறுப்பினர் கூட்டம்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்டத்தின் ஓசூர் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர அவை தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். நகர கழக பொறுப்பாளர் சத்யா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், தளி எம்எல்ஏவுமான பிரகாஷ், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்யாவை நகர பொருப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த திமுக தலைவர்,செயல்தலைவர் , பொது செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது.  திமுக தலைவர் பிறந்த நாளை  எழுச்சியாக கொண்டாடி வரும் இந்த நாளில் நகர பகுதியில் தேர்தலில் அகற்றப்பட்ட இடங்களில் புதியதாக கொடிகள் அமைத்து அப்பகுதி மக்களுக்கு நல உதவி அளித்து பிறந்த நாள் கொண்டாடுவது.45 வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பது,ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் தமிழக கவர்னரை ஜனநாயக வழியில் கண்டித்த நமது கழக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த தமிழக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது. உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திமுகாவினர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad