Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பிரபல ரவுடியான கலைராஜ் என்பவரை அவரது தம்பி சரத்குமார் அடித்து கொலை .......


    கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தினை சேர்;ந்த காளிராஜ் என்பவரை அவரது தம்பி சரத்குமார் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக சரத்குமாரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் 3வது கீழ தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம், இவரது மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு காளிராஜ், மகாராஜா, சரத்குமார் ஆகிய 3 மகன்கள், ராஜாங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். காளிராஜ் லோடுமேனாக வேலைபார்த்து வந்துள்ளார், மகாராஜா ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார்.சரத்குமார் ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். காளிராஜ் சரிவர வேலைக்கு செல்லமால், மது அருந்தி விட்டு அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதே போன்று நேற்றும் வழக்கும் போல மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்துள்ளார், அப்போது வீட்டில் இருந்த சரத்குமார் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ் கல்லால் சரத்குமாரை தாக்க முற்பட, சரத்குமார் அருகில் கிடந்த கட்டையால் காளிராஜை தாக்கியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்தில் காளிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து காளிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காளிராஜ் ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது மட்டுமின்றி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தீன் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad