தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
கோவையில் தமிழகத்தின் முதல் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அருங்காட்சியகத்தில் துப்பாக்கி, வாள், சீருடைகள் காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோவை ரயில்நிலையம் அருகே 144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஹாமில்டன் கிளப்பை புனரமைத்து காவல்துறை அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை