கோவில்பட்டி ஜீவ அனுகிரஹா அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கும் விழா
கோவில்பட்டி ஜீவ அனுகிரஹா அறக்கட்டளை சார்பில் மெயின் ரோடுகளில் மர கன்று வளர்க்கப்பட்டு வருகிறது. மர கன்றுகளுக்கு நீர் ஊற்றும் வாகனத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ரோட்டரி இன்ட்ராக்ட் சேர்மன் ஆசியா பார்ம்ஸ் பாபு, சங்க துணை தலைவர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். நீர் ஊற்றும் வாகனத்திற்கு 40 ஆயிரம் நிதி உதவியை காசோலையாக மாவட்ட தலைவர் விநாயகாரமேஷ் ஜீவ அனுகிரஹா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரனிடம் வழங்கினார். சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் துணை ஆளுனர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் வீராச்சாமி, பரமேஸ்வரன், நாடார் நடுநிலை பள்ளி செயலாளர் கண்ணன், ரோட்டரி உறுப்பினர்கள் மனோகர், ஜீவ அனுகிரஹா அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை