Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிய மர்ம நபர் - கல்லால் தாக்கிய வீட்டு உரிமையாளர்



    கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மாரியப்பன்(44), தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் மாவு அரவை மில் நடத்தி வருகிறார்.இவருக்கு மந்திதோப்பு சாலையில் உள்ள கதிர்வேல் நகரிலும் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு மாரியப்பன் சென்ற போது, வீட்டின் முன்பு ஒரு மர்ம நபர் வீட்டில் இருந்த டிவி, டிவிடி பிளேயர், துணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டி, பைக்கில் கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியப்பன், அந்த மர்ம நபரை தடுக்க முயன்றுள்ளார், ஆனால் முடியவில்லை, இருந்தாலும் அருகில் கிடந்த கல்லால் மர்ம நபரை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அந்த நபர் வீட்டில் எடுத்த பொருள்களை போட்டு, விட்டு ஒரு டிவிடி ப்ளேயருடன் பைக்கில் தப்பிச்சென்றுள்ளார். 


    இதனை தொடர்ந்து மாரியப்பன் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். டி.எஸ்.பிஜெபராஜ், மேற்கு காவல் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்த பார்த்த போது, வீட்டின் கதவுகளை இரும்புகம்பியால் உடைத்து, வீட்டில் இருந்து பொருள்களை திருடியுள்ளார். பணம், நகை எதுவும் வீட்டில் இல்லாத காரணத்தினால், பொருள்களை திருடியது தெரியவந்தது, மாரியப்பன் வந்த காரணத்தனால் பொருள்கள் அனைத்து தப்பியது தெரியவந்தது. மேலும் திருட வந்த மர்ம நபர் வீட்டில் அமர்ந்து மது அருந்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad