AATFUJ கண்டன அறிக்கை
கண்டன அறிக்கை
தூத்துக்குடியில் விஷ வாயுவை காற்றில் கலந்து நோய்களையும் மரணங்களையும் விளைவித்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொது மக்கள் போராட்டம் மிக வலுவாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு காவல் துறையை பயன்படுத்தி 144 தடை உத்தரவிட்டது. போராட்டத்தை ஒடுக்க முனைந்துள்ளதை மீறி போராடியவர்களையும், கலவரம் நோக்கில் காவல் துறை நடை பெற செய்தது.இதில் போரட்டக்காரர் உட்பட செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் காட்டுமிராண்டித்தனமான தாக்கிய காவல் துறையை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கிறது,
கருத்துகள் இல்லை