Header Ads

  • சற்று முன்

    திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் என் பெரியசாமியின் நினைவுதினமான வரும் 26ம் தேதி நினைவு மலர் வெளியீடு- பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம்



    தூத்துக்குடியில் நடந்த வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் பொறுப்பாளர்  கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கிப் பேசினார். தூத்துக்குடியில்  வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட  அவைத்தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். பொதுக்குழு  உறுப்பினர் என்.பி. ஜெகன், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை  வகித்தனர். 



    இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட பொறுப்பாளர்  கீதாஜீவன் எம்.எல்.ஏ., முக்கிய ஆலோசனை வழங்கிப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட  பொருளாளர் சுசீ ரவிந்திரன், விவசாயத் தொழிலாளர் அணி சுப்பிரமணியன், தலைமைச்  செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர்  கோட்டுராஜா, மாநகர அவைத்தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்  மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், டேவிட்ராஜ், மாவட்ட மகளிர் அணி  கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார்,ராமகிருஷ்ணன்,  மகளிர்  தொண்டர் அணி உமாதேவி, தொண்டர் அணி ரமேஷ், நெசவாளர் அணி சங்கரநாராயணன், விவசாயத்  தொழிலாளர் அணி சித்திரை செல்வன், இலக்கிய அணி அமைப்பாளர் மணி, பேச்சாளர்  சரத்பாலா, மீனவர் அணி அந்தோணிஸ்டாலின்,  மாநகர இளைஞர் அணி அமைப்பாளர்  ஆனந்த்கேப்ரியேல்ராஜ், மாநகர மாணவர் அணி சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

     தீர்மானங்கள்: வரும் ஜூன் 3ம் தேதி தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளை கட்சி  கொடியேற்றி,  இனிப்பு, நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடவேண்டும். மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்  என் பெரியசாமியின் முதலாமாண்டு ஆண்டு நினைவுதினமான வரும் 26ம் தேதி தூத்துக்குடி அண்ணாசிலை முன்பிருந்து அமைதி ஊர்வலம்  துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நினைவிடத்தில்  நிறைவடையும் வகையில் நடத்துவது. மேலும் நினைவு மலர்  வெளியிட்டு அன்னதானம் நடத்துவது என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad