கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி
கோவில்பட்டி அருகேயுள்ள கலிங்கப்பட்டி குமராபுரத்தினை சேர்ந்த கணபதி என்பவரது மகன் அருண்குமார், இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகேஷ்வரி என்ற மனைவியும், ஒன்றை வயதில் கவின்குமார் என்ற குழந்தையும் உள்ளது. கலிங்கப்பட்டி குமராபுரத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் திருவிழாவிற்காக அருண்குமார் குடும்பத்துடன் ஊருக்கு வந்துள்ளார். அதே போன்று அருண்குமார் உறவினர் விளாத்திகுளத்தினை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் அரவிந்த் திருவிழாவிற்காக வந்துள்ளார். அரவிந்த் விளாத்திகுளத்தில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து முடித்துள்ளான். இந்நிலையில் இன்று அருண்குமார், அரவிந்த் இருவரும் அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.. இது குறித்து தகவல் கிடைத்தும் பசுவந்தனை போலீசார் விரைந்து சென்று இருவர் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓட்டபிடராம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை