Header Ads

  • சற்று முன்

    நெல்லையில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிலிட்டு தற்கொலை




    நெல்லை சங்கரன் கோவில் அருகே குருக்கள் எட்டப்படியை சேர்ந்த தினேஷ் நல்ல சிவன் என்கிற மாணவன் அவரது தந்தை மாடசாமி குடி பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். 
    இதனால் மனம் ஒடிந்த மாணவன் தினேஷ் நெல்லை சந்திப்பில் உள்ள மேம்பால சுவற்றில் என் தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டான். இன்று காலை அந்த பாலத்தின் வழியாக வந்த பொது மக்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த மாணவன் அருகில் இருந்த பையை பரிசோதித்ததில் ஒரு கடிதம் கிடைத்தது. 


    என் தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையானதால் மனம் வெறுத்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும் மாநில முதல்வரும், பிரதமரும் என் மரணத்திற்கு பிறகாவது டாஸ்மாக் மது கடைகளை மூடவேண்டும். அப்படி முட்டவில்லை என்றால் ஆவியாக வந்து கடைகளை ஒடிப்பேன் என்று   அந்த கடிதத்தில் எழுதி இருந்து.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad