எட்டயபுரத்தில் நகை கடை சுவற்றை ஓட்டை போட்டு 100 சவரன் கொள்ளை
கோவில்பட்டி அடுத்துள்ளது எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்த குருசாமி செட்டியார் என்பவரது மகன் வெங்கடேஸ்ராஜா. இவர் எட்டயபுரம் வர்த்தக சங்க துணை தலைவராக உள்ளார். இவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் விஜயலெட்சுமி என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையின் பின் பகுதியில் தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது.
இன்று அதிகாலையில் இவரது கடைக்கு பின்புறம் உள்ள லாட்ஜ் அறை ஒன்று திறந்து கிடப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையெடுத்து எட்டயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கலா தலைமையில் போலீசார் வந்து லாட்ஜ் அறையை சோதனை செய்த போது, அங்குள்ள சுவர் ஓட்டை போடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசர் நகைக்கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்து, கடையின் முன் பகுதியினை திறந்து பார்த்த போது கடையில் இருந்த நகைகள் இருந்த இரும்பு பெட்டி வெல்டிங் மூலமாக உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், பதிவான ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவைகளும் திருடப்பட்டது தெரியவந்தது. சுவரை ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2மாதத்திற்கு முன்பு தற்போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நகைக்கடை அருகில் உள்ள மற்றொரு நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 60பவுன் தங்க நகை திருடப்பட்டது. இதுவரை அந்த கொள்ளை வழக்கில் யாரும், கைது செய்யப்படாத நிலையில் இந்த சம்பம் அப்பகுதி வியாபாரிகள் இடையே அச்சத்தினை ஏற்படுத்தயுள்ளது. எனவே காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை