Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் பக்தர்கள் சாலை மறியல்


    பௌர்ணமி என்றால் திருவண்ணாமலை தரிசிக்க தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் திரளாக வந்து திருவண்ணாமலையில்கிரிவலம் வந்து பின்னர் அண்ணாமலையாரை தரிசித்து செல்வது வழக்கம்.


    சித்திரா பௌர்ணமி என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகமாக காணப்பட்டது. இந்த சூழலில் மக்களுக்கு போதிய வசதிகள் மாவட்ட ஆட்சியாளர் செய்து கொடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    பக்தர்கள் உண்ண உணவின்றி குடிக்க தண்ணீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். பக்தர்கள் திரும்பி அவரரவர் ஊர்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து அரசு செய்து கொடுக்கததால் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலை மோதியது. திடீரென மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமும் ஏற்பட்டது. பிறகு பேருந்து நிலையத்தில் திரண்ட பக்தர்கள் இரயில் நிலையத்திற்கு திரண்டனர். இதனால் தங்கள் ஊருக்கு செல்வதில் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad