காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி : தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் தொடங்கி டபிள்யூஜிசி ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் வரை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஜெயகுமார் ரூபன், மாவட்ட மாணவர் அணிச் செயலளார் ஜான் அலெக்ஸாண்டனர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், முன்னாள் கவுன்சிலர்கள், கோட்டுராஜா, பாலசுப்பிரமணியன், சுரேஷ்குமார், ரவி, உட்பட திமுகவினர் பலர் பங்கேற்றனர்.
மேலும், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டேனியல் ராஜ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மதிமுக மாநகர் மாவட்ட தலைவர் முருகபூபதி, நிர்வாகிகள் சேவியர், பால்ராஜ், சுந்தர்ராஜ், பொன்ராஜ், நக்கீரன், மகராஜன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயலளார் அர்ஜூணன், மாநகரச் செயலளார் ராஜா, சிபிஐ மாவட்ட செயலளார் அழகுமுத்து பாண்டியன், நிர்வாகிகள் பரமசிவம், ஞானசேகரன், தனலெட்சுமி, விடுதலை சிறுத்தைகள் மத்திய மாவட்ட செயலளார் அகம்மது இக்பால், நிர்வாகிகள் ராம், நிர்மலா, செல்வகுமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ், சமக வடக்கு மாவட்ட செயலாளர் வில்சன், மாநகர செயலாளர் பிரபாகரன், கண்டிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.,
கருத்துகள் இல்லை