Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இளசை நண்பர்கள் குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் இளசை நண்பர்கள் குழு என்ற பெயரில் சமூக வலைத்தளம் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி, கல்லூரி  மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பினர் தமிழகமெங்கும் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எட்டயபுரத்தில் நேற்று மாலை சுமார் 80 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எட்டயபுரம் பாரதி மணிமண்டம் முன்பு கூடினர். பின் ஊர்வலமாக  எட்டயபுரம் பேரூந்து நிலையம் முன்பு கூடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. பின் இளசை நண்பர்கள் குழுவினர் ஊர்வலமாக வந்து பாரதி மணிமண்டபதிற்கு வந்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.போராட்டத்தின் முடிவில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad