Header Ads

  • சற்று முன்

    நடை பாதை வியாபாரி வயிற்றில் அடித்த நெடுஞ்சாலை துறை


    மேலே படத்தில் காண்பது இயற்கை பேரிடர் அல்ல ! செயற்கையின்  சீற்றம் !
    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா உட்பட்ட ஹரிஹரன் பஜார் தெருவில் காலகாலமாக நடைபாதையில் வியாபாரம் செய்து வந்தனர். இந்த பஜார் தெருவில் குறைந்தது 50 முதல் 70 கடைகள் நடைபாதை நம்பியே பிழப்பை நடத்தி வந்தனர்.

    இந்த நடைபாதை கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் பஞ்சாயத்து போர்டு நிர்வாகிகள் வசூல் செய்து வந்தனர். வசூலை மட்டும் கரந்த பஞ்சாயத்து போர்டு நிர்வாகிகள் இந்த அதிரடி அகற்றதில் பங்கு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தது விசித்திரம். 
    இந்த நடைபாதையை  நம்பி பிழப்பை நடத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  நேற்று மாலை ஏதோ கடமைக்கு ஒளி பெருக்கி முலம் அறிவித்துவிட்டனர். முறையான கால அவகாசம் கொடுக்காமல் அதிரடியாய் இன்று காலை வியாபாரிகள் கெஞ்சியும் செவிசாய்க்காமல் ஜேசி பி வாகனம் கொண்டு தரைமட்டம் செய்துவிட்டனர். 
    ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து இருந்தால் ஓடுகளை பிரித்து எடுத்து இருப்போம். இதனால் எங்களுக்கு 5000 முதல் 10000 வரை நட்டம் ஏற்பட்டதாக கண்ணிருடன் புலம்புகின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad