Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பிரச்சாரம்

    தமிழகம் முழுவதும் 23ந்தேதி முதல் 30ந்தேதி வரை சாலைப்பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலைப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை காவல்துறை டி.எஸ்.பி.ஜெபராஜ் கொடியைசத்து தொடங்கி வைத்தார். டி.எஸ்.பி.அலுவலகம் முன்பு தொடங்கி இந்த வாகனப்பிரச்சாரம், முக்கிய வீதிகளின் வழியாக சென்று பயணியர் விடுதி முன்பு நிறைவு பெற்றது. இந்த பேரணியில் சாலைவிதிகளை பின்பற்ற வேண்டும், ஹெல்மேட் அணிய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது..இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சுடலைமுத்து, ஆக்டிவ்மைண்டஸ் தேன்ராஜா மற்றும் திரளான பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad