திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை : திமுகவில் புதிதாக தகவல் தொழில் நுட்ப அணி உருவாக்கப்பட்டு, அதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த தகவலை தொழில்நுட்ப அணியை மேலும் விரிவு படுத்திட வேண்டும் ன செயல்தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு மற்றும் பாகம் அளவில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். ஆன்ட்ராய்டு போன் உபயோகிக்கத் தெரிந்த ஆர்வமுள்ள கழக தோழர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 10.05.2018க்குள் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அரங்கில் சமர்ப்பித்திட வேண்டும். எனவே, வடக்கு மாவட்ட திமுகவிற்க்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆர்வமுள்ள கழக தோழர்களை சம்பந்தபட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கண்டறிந்து அவர்களை முழுமையாக இதில் ஈடுபடுத்தி கழக வளர்ச்சிக்கு வலுசேர்த்திட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை