Header Ads

  • சற்று முன்

    திருப்பூர் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை


    திருப்பூரை அடுத்த புலுவாபட்டி பழனி சாமி நகர் 3 வது தெருவில் வசிக்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார் இவரும் இவரது உறவுக்கரான சரவணன்  என்பவரும் சேர்ந்து கூத்தம் பாலளையத்தில் பனியன் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். வழக்கம் போல் சிவகுமார் வீட்டை விட்டு கிளம்பி விட்டார். 
    இவரது மனைவியான சந்த குமாரி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனியாக இருக்கும் நேரத்தில் சினிமா பாணியில் வருமானவரி துறை அதிகாரிகள் என்று கூறி 5 பேர் வந்து வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று  கூறினர். முதலில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா புட்டேஜ் பிடிங்கி விட்டனர். செல் போன்களை வாங்கி கொண்டனர். அதன் பிறகு வீட்டில் உள்ள நகைகள் பணத்தை மூட்டை கட்டி கொண்டு திருப்பூர் வருமானவரி அலுவலகத்தில் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி தப்பி விட்டனர். பின்னர் அவரது கணவருக்கு தொடர்பு கொண்டு பேசியதில் வந்தவர்கள் போலி வருமானவரி அதிகாரிகள் என்பது தெரியவந்து.வீட்டில் உள்ள 30 சவரன் தங்க நககைகள் 4 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து சென்றுவிட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கமிஷனர், துணை கமிஷனர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad