கழுத்து அறுபட்ட நிலையில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு !!
வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவரது மகள் சங்கீதா(17).அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வருகிறார் சங்கீதாவின் தாயார் ராதா .கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இவரது தந்தை டீக்காராமனுடன் தாழனூரில் வசித்து வந்தார். சங்கீதா பள்ளி விடுமுறையில் உள்ளார். தனது வங்கி புத்தக நகலை பள்ளியில் சமர்ப்பிக்க சங்கீதா நேற்று ஒழலை வந்துள்ளார்.வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது அண்ணன் நவீன் நேற்றிரவு முழுவதும் தேடியுள்ளார். இந்த நிலையில் காலை ஒழலையில் உள்ள ராதாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து திமிரி காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சமபவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.மேலும் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் இதனை தொடர்ந்து மோப்ப நாய் சன்னி உதவியுடன் தேவையான ஆதாரங்களை சேகரித்தனர் .இந்த சம்பவம் குறித்து கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை