கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது
கோவில்பட்டியில் கடந்த 15ந்தேதி காவல்துறையினரை பணி செய்யவிடமால் தடுத்ததாக கூறி மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்வம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் இன்று அவரை கைது செய்தனர். காவல்துறையினர் செல்வம் மீது பொய் வழக்கு போட்டு வேண்டுமென்று கைது செய்துள்ளதாக கூறி அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினரை கண்டித்து, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தும், டி.எஸ்.பிக்கள் ஜெபராஜ், தர்மலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 28பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை