கோவில்பட்டி நெடுஞ்சாலையில் சாலை கார் கவிழ்ந்து விபத்து
கருவேலயுதபலயத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ராஜேந்திரன் இவர் தம் குடும்பத்துடன் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். காரை ராஜேந்திரன் ஒட்டி வந்துள்ளார். கார் தூத்துக்குடி மாவட்டம் தாப்பாதி அருகே வரும் போது கட்டுபாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இதில் கார் ஒட்டி வந்த இராஜேந்திரன் மற்றும் மகளான வானதி சம்பவ இடத்திலே பலியானார்கள்.
அவரது மனைவி விஜயகுமாரி, இன்னொரு மகளான கமலி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பலியான தந்தை மற்றும் மகளை விளாத்திகுளம் அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுபிவைதனர்.
கருத்துகள் இல்லை