Header Ads

  • சற்று முன்

    மத்திய, மாநில அரசை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்



    காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சியினர் சாலைமறியல், ரெயில் மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு தீடீரென திமுக நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையிலான போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யமால் எச்சரித்து அனுப்பினர்;.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad