Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் தனியார் நூற்பாலை மேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளியிருப்பு போராட்டம்




    கோவில்பட்டியில் இயங்கி வரும் லெட்சுமி மில் மேலாளர் தொழிலாளர்களை அவதூறாக பேசி வருவதாகவும், அவரை கண்டித்தும், மில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து, உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லெட்சுமி மில் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த மில் மேலாளராக இருந்து வரும் காமராஜ் என்பவர் அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை அவதூறாக பேசி வருவதாகவும், பெண் தொழிலாளர்களை மிரட்டி வருவதாகவும், மேலாளரின் இந்த போக்கினை கண்டித்தும், மேலாளர் மீது மில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் மில் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து மேலாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad