Header Ads

  • சற்று முன்

    மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை, அருகதையில்லை - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேட்டி



    மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை, அருகதையில்லை என்றும், எந்த தேர்தலை பற்றியும், பயப்படாத கவலை கொள்ளாத இயக்கம் அதிமுக என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க ஒளிப்பட கட்சி மற்றும் புகைப்படக்கண்காட்சியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்து தமிழக அரசின் சாதனை விளக்க மலரினையும் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் பா.ஜ.க ஆட்சி பிடிக்கும் என்று  தமிழிசை கூறுவதுஅது வேடிக்கை தான் - கட்சியை வைத்திருப்பவர்கள் எல்லோரும், ஆட்சியை பிடிக்கும் என்று கூற எல்லோருக்கும் உரிமை உண்டு,காவிரிமேலாண்மை தொடர்பாக முதல்வரும், துணை முதல்வரும் சட்டமன்றத்தில் விரிவாக கூறியுள்ளனர். இன்னும் 5 நாள்கள் உள்ளது, இந்த பிரச்சினைக்காக அதிமுக எம்.பிகள் 14நாள்கள் நாடாளுமன்றத்தினை முடங்கியுள்ளனர். நிச்சயமாக தமிழகத்திற்கு நல்ல தீர்வு வரும், அது வரை அந்த பணியை தமிழக அரசு செய்யும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை, அருகதையில்லை. ஆளும் கட்சி அரசின் சாதனைகளை கொண்டாடடும், எதிர்கட்சியா கொண்டாட முடியும்,கனவு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார், ஜெயலலிதா மறைந்தவுடன் இந்த ஆட்சி நீடிக்காது என்று கனவு கண்டார். 



    ஆனால் அதையும் தாண்டி இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டியது கிடையாது, திமுக தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, சின்னம் இல்லமால் இருந்த போதும், இருக்கும் போதும் தேர்தலை கண்டு பயந்தது கிடையாது, கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறவுள்ளது. எந்த தேர்தலை பற்றியும், பயப்படாத கவலை கொள்ளாத இயக்கம் அதிமுக என்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad