Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி கழுகசாலமூர்த்தி திருக்கோவில் தேரோட்டம்



    தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், 
    இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    விழாவின் ஒவ்வொரு நாளும் கழுகசாலமூர்த்தி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.


    இதனை தொடர்ந்து கோ ரதத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி முன் செல்ல, சட்டரதம் என்று அழைக்கப்படும் சிறு தேரில் விநாயகர் எழுந்தருளி பக்தர்கள் கரகோஷங்களுடன் நான்கு ரத வீதி வழியாக இழுத்து வரப்பட்டது. இதையெடுத்து வைர ரதம் என்று அழைக்கப்படும் பெரிய தேரில் மூலவர் கழுகசாலமூர்த்தி அம்பாள்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்களின் அரோஹரா கோஷங்களுடன் திருத்தேர் நான்கு ரத வீதி வழியாக இழுத்து வரப்பட்டு நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 31ந்தேதி நடைபெறுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad