Header Ads

  • சற்று முன்

    சுகாதாரத்திற்கு ஓர் எடுத்துகாட்டு எட்டயபுரம் - பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் !!!


    எட்டயபுரம் பேரூரட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பேட்டை ரோடு பகுதியில் பேரூராட்சியால் கட்டப்பட்ட கழிப்பிடம் பயனற்ற நிலையில் இருக்கிறது. ஆனால் இப்போது விரும்பதகாத செயல்கள் நடைபெறும் இடமாக தோற்றமளிக்கிறது.


    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூரட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பேட்டை ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது கழிப்பிடம். இந்த கழிப்பிடம் 6 அறைகளைக் கொண்டது. ஆண்களுக்கு 3  கழிவறைகளும் பெண்களுக்கு 3 கழிவறைகளும் உள்ளன அதுமட்டுமின்றி தண்ணீர் தொட்டிகள் அமைத்திருக்கின்றனர் மற்றும் மின்சாரம் பெறப்பட்டுள்ளது இருப்பினும் பயனற்ற நிலையில் காணப்படுகிறது.  ஆனால் இப்போது  விரும்பதகாத செயல்கள் நடைபெறுகிறது. 


    அந்த பகுதி மக்கள் கூறுவது எட்டயபுரம் பேரூரட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இது பராமரிப்பின்றி அரசு பணம் வீணடிக்கப்பட்டடுள்ளது என்றும் மேலும் உடனடியாக பொதுமக்கள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad