கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர், மோர் பந்தல் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் அருகே கோடை காலத்தினை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச நீர், மோர், மற்றும் குளிர்பானங்களை வழங்க அதிமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர், மோர் பந்தலை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கினார்
கோடை காலத்தினை முன்னிட்டு கடும் வெயிலில் வரும் பொது மக்களுக்கு தமிழகம் அதிமுக சார்பில் இலவச நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் அதிமுக சார்பில் அண்ணாபஸ் நிலையம் அருகே இலவச நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளா செல்லபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை