கோவில்பட்டியில் பூட்டிய நகை கடையை உடைத்து கொள்ளை
கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை எதிரில் சங்கரநாராயணன் என்பவர் சொந்தமாக நகை கடை நடத்திவருகிறார். வழக்கமாக கடையை முடிவிட்டு இன்று திறக்க வரும் போது கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் 60 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். புகாரின் அடிபடையில் அங்கு வந்த காவல் அதிகாரிகள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை