Header Ads

  • சற்று முன்

    காட்டு நாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் இனச்சான்று வழங்க கோரி காத்திருக்கும் போராட்டம்


    கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள காட்டு நாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் இனச்சான்று வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ –மாணவிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, வானரமுட்டி, நாலாட்டின்புதூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், எப்போதுவென்றான் ஆகிய பகுதிகளில் வாழும் காட்டு நாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் இனச்சான்று வழங்க கோரி அச்சமுதாய மக்கள் பலமுறை விண்ணப்பித்தும், சான்றிதழ் வழங்கப்படவில்லை, மாவட்ட ஆட்சியர் அறிவுருத்திய பின்னரும், கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகும், சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால், சான்றிதழ் கிடைக்கமால் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ –மாணவிகள் சான்றிதழ் இல்லாமல் எவ்வித சலுகையும் பெறமுடியமால், வேலைவாய்ப்புக்கும், மேல் கல்விக்கும் செல்ல முடியாத நிலை உள்ளதால் உடனடியாக சாதிசான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ –மாணவிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோட்டாட்சியர் அனிதா மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் உடன்பாடு ஏற்படவில்லை, சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தினை கைவிட போவதில்லை என்று கூறி தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad