Header Ads

  • சற்று முன்

    வெற்றிவேல் வீட்டிற்கு போலீஸ் நுழைந்ததற்கு தினகரன் கடும் எதிர்ப்பு


    தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் வெற்றிவேல்,தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அரசை விமர்சித்து வருகின்றனர். சென்னையில் நேற்று அத்துமீறி தலைமை செயலகத்துக்குள் நுழைந்து செய்தியாளர்களை சந்தித்து அரசுக்கு எதிராக புகாரும் தெரிவித்தனர்.


    இதையடுத்து அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் புகார் கூறினார் விளக்கம் தரலாம். அல்லது வழக்கு தொடரலாம். வீடு புகுந்து தேடுவது சரியல்ல. தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை இருவரும் சந்தித்தது சரிதான் என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad