கோவில்பட்டியில் தீப்பெட்டி குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பண்டல்கள் சேதம்
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீப்பெட்டி குடோன் உள்ளது. கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டியை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தீப்பெட்டி குடோனில் இருந்து புகை வருவதை கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் தீயணைப்பு நிலைய அலுவலா் சங்கரன் தலைமையில் விரைந்து வந்து குடோன் கதவுகளை உடைத்து பார்த்த போது தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டு இருந்தது மேலும் அதிக புகை மூட்டமாக இருந்த காரணத்தினால் தீயணைப்பு படையினர் கடும் சிரமத்திற்கு இடையில் தீயை அணைக்க முயன்று தீயை அணைத்தனர் . குடோனில்இருந்த பல லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் முற்றிலுமாக பற்றி எரிந்த காரணத்தினால் மேலும் ஒரு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை