Header Ads

  • சற்று முன்

    புதுச்சேரி மாநில நகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்ய கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

    புதுச்சேரி மாநில நகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம் நடந்துவருகிறது.
    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சிகளில் தொழில் உரிம வரி, தொழில் வரி, வணிக வளாக வரி, குப்பை வரி உள்ளிட்டவை திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கூட்டமைப்பு இன்று கடையடைப்புப் போராட்டத்துக்கு  அழைப்பு விடுத்திருந்தார்கள். இந்நிலையில், புதுச்சேரி நகராட்சிக்கு மட்டும் உயர்த்தப்பட்ட வரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத வணிகர் கூட்டமைப்பு, மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்துசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad