பாஜகவின் திட்டம் அதிமுகவை அழிப்பது - டி.டி.தினகரன்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவின் ஏஜெண்ட்டுகள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் மீண்டும் கட்சியில் சேர முதல்வர் மோடிதான் காரணம் என்றார்.
பிரதமர் மோடி கூறியதாலேயே கட்சி இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக கூறிய அவர் சசிகலா மற்றும் தினகரன் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஓபன் டாக் குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.
ஏஜெண்ட்டாக மாறிவிட்டார் பாஜகவின் ஏஜெண்ட்டுகள்
பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்ட்டாக ஓ.பி.எஸ். மாறிவிட்டார் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க.வின் முதல் ஏஜெண்ட் ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது ஏஜெண்ட் எடப்பாடி பழனிச்சாமி என்றும் டிடிவி விமர்சித்துள்ளார்.
கருத்துகள் இல்லை