அலட்சியம் காட்டும் வேலூர் மாநகராட்சி - தொற்று நோய் பரவும் அபாயம் !!
வேலூர் காட்பாடி பகுதிக்குட்பட்ட வார்டு -5- பகுதி- 1- அமைந்துள்ள பத்திர பதிவு அலுவலகம் எதிர் தெருவில் ஆட்டு இறைட்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. பல நாட்கள் கடந்தும் சுத்தம் செய்யாமல் வேலூர் மாநகராட்சி அலட்சியம் காட்டிவருகிறது. ஏற்கனவே திறந்த நிலை கழிவு சாக்கடை இருப்பதால் தூர்நாற்றம் பொறுக்கமுடியவில்லை.
இந்நிலையில் மூட்டை மூட்டையாக ஆட்டு இறைட்சி கழிவுகள் சாலையில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பத்திர பதிவுக்கு வரும் பொது மக்கள் முகத்தை சுளித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை