BSNL ஒப்பந்த தொழிலாளி தற்கொலை !!!
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பி.எஸ்.என் .எல் 23 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த மனோஜ் என்பவர் . இவர் கேபிள் ஜாண்டரக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த முன்று மாத காலமாக சம்பளம் வழ்ங்கப்படாததால் மனம் உடைந்த இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போன்ற ஒப்பந்த ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் பி.எஸ்.என் .எல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர். இது போன்ற ஒப்பந்த ஊழியர்கள் இருப்பதாகவும், உடனே அரசு தலையிட்டு ஒப்பந்த ஊழியர்களை காப்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்துகின்றனர் . அருமனை பகுதி காவல் நிலையம் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை