Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் கோவில் கருவறையில் சென்று அம்மன் நகையை திருடிய பெண் கைது

    கோவில்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ செண்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற இக்கோவில் இந்து அறநிலையதுறையின் கீழ் செயல்படுகிறது  இக்கோவிலுக்கு தினதோறும் ஆயிர கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் மேலும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகின்றனர் இக்கோவிலில் இன்று அதிகாலை வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டது அதனை தொடர்ந்து அதிகாலை பூஜை நடைபெற்றது  இதனை தொடர்ந்து ஸ்ரீ செண்பகவல்லியம்;மனுக்கு பூஜை முடிந்தது அருகில் உள்ள சாமிக்கு பூஜைக்கு குருக்கள் சென்ற நேரத்தில் அங்கு பக்தர் போல் வந்த ஒரு பெண் அம்மன் கருவறைக்கு சென்று அம்மன் அணிந்திருந்த தாலி வளையல்,கம்மல்,மூக்குத்தி மற்றும் வெள்ளி காப்பு,கொழுசுகளை திருடி கொண்டிருக்கும் போது அங்கு வந்த குருக்கள் அதிர்ச்சி அடைந்தார் உடனே வெளியே காவலுக்கு இருந்த ஊழியர்களை அழைத்து அந்த பெண்னை பிடித்தனர் பின்னர் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அங்கு வந்த போலீசார் அப் பெண்ணை கைது செய்தனர் பின்னர் காவல்நிலையத்தில் சென்று விசாரணை செய்ததில்  அவர் திருடிய 11கிராம் தங்கம் மற்றும் 107 கிராம்  வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்


    அப்பெண் கழுகுமலை முத்தையாமால் தெருவைச் சேர்ந்த அருள்செல்வம் என்பவவரது மனைவி சண்முகசுந்தரி (35) என்பதும், தற்போது நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள செட்டிகுளத்தில் வசித்து வருவதும்,  விசாரணையில் தெரிய வந்தது மேலும் அப்பெண் மீது குருவிகுளம், கழுகுமலை,இருக்கன்குடி ஆகிய காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இக்கோவில் இந்துஅறநிலைய துறையின் கீழ் இருந்தும்; முறையான் பாதுகாப்பு இல்லாததால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் பொதுமக்கள் சாட்டுகின்றனர்,  மேலும் கோவிலுக்கு வரும்; திருடர்களை கண்டறிய போதிய கண்காணிப்பு கேமிராகூட இல்லாமலும், போதிய பாதுகாவலர்கள் இல்லாமலும் அலட்சிய போக்கில் இந்து அறநிலையதுறை செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஒரு பெண் தனியாக ஒரு புகழ்பெற்ற பெரிய கோவில் கருவறை வரை சென்று அம்மனின் நகைகளை திருடிய சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad