கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் லாரி பின்னால் மோதி காரில் வந்தவர்கள் பலி
கிருஷ்ணகிரி அருகே லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த கணவன் மனைவி உட்பட மூவர் பலி
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் ராமசந்திரன் மற்றும் அம்புஜம், இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி வழியாக காரில் பெங்களூர் சென்று கொண்டு இருந்தனர். காரை ஓட்டுனர் ஒருவர் ஓட்டி சென்றார்.
இதே போல் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ஓசூருக்கு லாரி ஒன்று தேங்காய் ஓடு ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்னும் இடத்தில் வந்த போது மருத்துவர்கள் வந்த கார் லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயனம் செய்த மருத்துவ தம்பதிகளான அம்புஜம், ராமசந்திரன் மற்றும் கார் ஓட்டுனர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை